நல்குரவு

திருக்குறள்:
 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் 
சொற்பொருள் சோர்வு படும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.

மு.வ உரை:
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.

ADVERTISEMENTS
Translation:
Though deepest sense, well understood, the poor man's words convey,
Their sense from memory of mankind will fade away.

ADVERTISEMENTS
Explanation:
The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.