நல்குரவு

திருக்குறள்:
 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த 
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.

மு.வ உரை:
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.

ADVERTISEMENTS
Translation:
From penury will spring, 'mid even those of noble race,
Oblivion that gives birth to words that bring disgrace.

ADVERTISEMENTS
Explanation:
Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.