உழவு

திருக்குறள்:
 ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் 
நீரினும் நன்றதன் காப்பு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உழுவதைக்
காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும்
மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.

மு.வ உரை:
ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை:
உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.

ADVERTISEMENTS
Translation:
To cast manure is better than to plough;
Weed well; to guard is more than watering now.

ADVERTISEMENTS
Explanation:
Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).