உழவு

திருக்குறள்:
 இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது 
கைசெய்தூண் மாலை யவர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தாமே
தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று
கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.

மு.வ உரை:
கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய
தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு
ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

சாலமன் பாப்பையா உரை:
தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம்
பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல்
கொடுக்கவும் செய்வர்.

ADVERTISEMENTS
Translation:
They nothing ask from others, but to askers give,
Who raise with their own hands the food on which they live.

ADVERTISEMENTS
Explanation:
Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg.