உழவு

திருக்குறள்:
 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் 
தொழுதுண்டு பின்செல் பவர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.

மு.வ உரை:
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே
உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின்
செல்கின்றவரே.

சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே
வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர்
பின்னே செல்பவர் ஆவர்.

ADVERTISEMENTS
Translation:
Who ploughing eat their food, they truly live:
The rest to others bend subservient, eating what they give.

ADVERTISEMENTS
Explanation:
They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.