உழவு

திருக்குறள்:
 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது 
எழுவாரை எல்லாம் பொறுத்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பல்வேறு
தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில்
இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.

மு.வ உரை:
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை:
உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச்
செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு
அச்சாணி ஆவர்.

ADVERTISEMENTS
Translation:
The ploughers are the linch-pin of the world; they bear
Them up who other works perform, too weak its toils to share.

ADVERTISEMENTS
Explanation:
Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil.