குடிசெயல்வகை
திருக்குறள்:
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
ADVERTISEMENTS
போர்க்களத்தில்
எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல்
படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச்
செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு.
மு.வ உரை:
போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்
அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான்
பொறுப்பு உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத
வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச்
செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.
ADVERTISEMENTS
The fearless hero bears the brunt amid the warrior throng;
Amid his kindred so the burthen rests upon the strong.
ADVERTISEMENTS
Like heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most efficient in a family.