குடிசெயல்வகை

திருக்குறள்:
 நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த 
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.

மு.வ உரை:
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.

ADVERTISEMENTS
Translation:
Of virtuous manliness the world accords the praise
To him who gives his powers, the house from which he sprang to raise.

ADVERTISEMENTS
Explanation:
A man's true manliness consists in making himself the head and benefactor of his family.