குடிசெயல்வகை

திருக்குறள்:
 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் 
மடிதற்றுத் தான்முந் துறும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தன்னைச்
சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச்
செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து
துணைபுரியும்.

மு.வ உரை:
என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

சாலமன் பாப்பையா உரை:
என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன்
என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு
உதவ முன்வந்து நிற்கும்.

ADVERTISEMENTS
Translation:
'I'll make my race renowned,' if man shall say,
With vest succinct the goddess leads the way.

ADVERTISEMENTS
Explanation:
The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.