குடிசெயல்வகை
திருக்குறள்:
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
ADVERTISEMENTS
தன்னைச்
சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச்
செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து
துணைபுரியும்.
மு.வ உரை:
என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.
சாலமன் பாப்பையா உரை:
என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன்
என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு
உதவ முன்வந்து நிற்கும்.
ADVERTISEMENTS
'I'll make my race renowned,' if man shall say,
With vest succinct the goddess leads the way.
ADVERTISEMENTS
The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.