நாணுடைமை

திருக்குறள்:
 குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் 
நாணின்மை நின்றக் கடை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும். அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்.

மு.வ உரை:
ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப்
பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை
எல்லாவற்றையும் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.

ADVERTISEMENTS
Translation:
'Twill race consume if right observance fail;
'Twill every good consume if shamelessness prevail.

ADVERTISEMENTS
Explanation:
Want of manners injures one's family; but want of modesty injures one's character.