நன்றியில்செல்வம்

திருக்குறள்:
 கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய 
கோடியுண் டாயினும் இல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.

மு.வ உரை:
பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம்
அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள்
இருந்தாலும் இல்லாததே ஆகும்.

ADVERTISEMENTS
Translation:
Amid accumulated millions they are poor,
Who nothing give and nought enjoy of all they store.

ADVERTISEMENTS
Explanation:
Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.