நன்றியில்செல்வம்

திருக்குறள்:
 எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் 
நச்சப் படாஅ தவன்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?.

மு.வ உரை:
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும்
விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி
நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?.

ADVERTISEMENTS
Translation:
Whom no one loves, when he shall pass away,
What doth he look to leave behind, I pray?.

ADVERTISEMENTS
Explanation:
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?.